Home உலகம் நிலவுக்கு ஏன் இத்தனை கோபம்

நிலவுக்கு ஏன் இத்தனை கோபம்

சிவப்பாய் எரி(க்) கிறது

அமெரிக்காவில் செக்கச் சிவந்த நிறத்தில் தோன்றிய நிலவை அதிகளவிலான மக்கள் பார்த்து ரசித்தனர், வியந்தனர். 

நிலவுக்கு என்ன வந்தது ஏன் இத்தனை கோபம்? ஒரு வேளை கொரோனா தாக்கியிருக்குமோ!

வாஷிங்கடனில் உள்ள வானுயர கட்டிடங்களுக்குப் பின்னால் தோன்றிய நிலா சிவந்த நிறத்தில் காட்சி அளித்தது. சிவந்த,முழு நிலவைப் பார்த்து ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஆனாலும் நிலவுக்கு உடல் நலம் சரியில்லை என்று மட்டும் யாரும் கூறவில்லை. அப்படி நினைப்பதா நம் கவலை! நாம் தான் கொரோனா பற்றியும், செத்துப்பொவது பற்றியும் கவலைப்படுவதே இல்லையே!

மேலும் ஒரு தரப்பினர் பற்றி எரியும் காட்டுத் தீயை பிரதிபலிக்கும் பிம்பமாக முழு நிலா சிவந்து காட்சியளித்ததாகவும்  தெரிவித்தனர்.

கற்பனைக்கா பஞ்சம் ! அது கிடக்கட்டும் இன்று சந்திரன் எந்த வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார்?

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version