இறுதிச்சுற்றுக்கு அசத்தல் முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அபாரமாக செயல்பட்டார்.
32- ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
ஆகஸ்ட் 7- ஆம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டி நடைபெற உள்ளது.