கோத்தா பாரு, நவம்பர் 9 :
கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் மையமாக மாநில அரசு அதன் பிரதான மண்டபத்தை பயன்படுத்த அனுமதித்த அரசின் நடவடிக்கையை கிளந்தான் சுகாதாரத் துறை பாராட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்த உதவும் என்று அதன் இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறினார்.
மேலும் டாருல்நெய்ம் வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையம் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முற்பதிவு இல்லாது தங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும்.
“இது ஆரம்ப கட்டம் என்பதால், இந்த மையம் முன்னணி பணியாளர்களுக்காக திறக்கப்பட்டிருந்தது, மேலும் இன்று முதல் இருநாட்களுக்கு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது” என்றார்.
“MySejahtera வழியாக பூஸ்டர் டோஸ்களுக்கான தேதிகளைப் பெற்றவர்கள், அந்தந்த மருத்துவமனைகள் மற்றும் தனியார் சுகாதார கிளினிக்குகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மற்றொரு அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொது தடுப்பூசி மையங்களும் (PPV) மூடப்பட்டுள்ளன என்றார்.
“பிபிவிகள் செப்டம்பர் முதல் கட்டம் கட்டமாக மூடப்பட்டன, கடைசியாக ஒரு PPV கடந்த வாரம் மூடப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
“பொது PPV கள் மூடப்பட்டிருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பொதுமக்கள் தங்கள் தடுப்பூசிகளைப் பெறலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.