Home மலேசியா 24 மணி நேரத்தில் பினாங்கு பாலத்தில் 2ஆவது பெண் தற்கொலை முயற்சி -ஒரு பெண் மூழ்கியிருக்கலாம்...

24 மணி நேரத்தில் பினாங்கு பாலத்தில் 2ஆவது பெண் தற்கொலை முயற்சி -ஒரு பெண் மூழ்கியிருக்கலாம் என தகவல்

பினாங்கு பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இது பினாங்கில் 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது சம்பவமாகும். அதிகாலை நடந்த சம்பவத்தில் 22 வயது பெண் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது காரை பாலத்தில் விட்டுச் சென்றதாக திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் விழுந்ததாக நம்பப்படும் பகுதியை துறையின் பணியாளர்கள் கண்காணித்து வருவதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று, பினாங்கு பாலத்தில் இருந்து 30 வயதுடைய மற்றொரு பெண் விழுந்தார். ஆனால் மீனவர்கள் குழுவால் மீட்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version