சிரம்பான், மே 27 :
ஜாலான் கம்போங் ராவா ஹிலீர், லேங்கேங்கில், இன்று காலை நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, லோரி மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தார்.
நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மான் கூறுகையில், காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மொடெனாஸ் கிறிஸ் வகை மோட்டார் சைக்கிளில் பயணித்த முகமட் இஸ்கந்தர் அப்துல்லாஹ் ஜவாவி (31) என்பவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
“46 வயதான லோரி ஓட்டுநர் செப்பாங்கில் இருந்து பந்தாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இதன்போது, திடீரென எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லோரியின் பாதையில் நுழைந்தது.
“முதற்கட்ட விசாரணையில் விபத்து நடந்த பகுதி இரு வழி பாதை கொண்ட சாலை என்று கண்டறியப்பட்டது. மேலும் வானிலை நன்றாக உள்ளது மற்றும் சாலையின் மேற்பரப்பு வறண்டு உள்ளது, ”என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.