Home மலேசியா 15வது பொதுத் தேர்தல் பற்றிய அறிக்கைகளை வெளியிட நஜிப் உட்பட சிறை கைதிகளுக்கு அனுமதி இல்லை

15வது பொதுத் தேர்தல் பற்றிய அறிக்கைகளை வெளியிட நஜிப் உட்பட சிறை கைதிகளுக்கு அனுமதி இல்லை

மலாக்கா, அக்டோபர் 20 :

15வது பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சிறைக் கைதிகள் எந்த அறிக்கையையும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது, அதுபோல சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் நஜிப்பும் தற்போது ஒரு சிறைக்கைதியே என்று சிறைத்துறையின் மூத்த இயக்குநர் ஹாஷிம் தெரிவித்தார்.

சாதாரணமாக சிறைக் கைதிகளிடமிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது ஆவணங்கள் கூட, வெளியே அனுப்பப்படுவதற்கு முன், சிறைச்சாலைகள் திணைக்களத்தால் முதலில் படித்துப்பார்க்கப்படும். அதில் ஏதேனும் தணிக்கை செய்ய நேரிட்டால், அவை தணிக்கை செய்யப்படும் என்றார்.

“சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை, ஆளும் அரசாங்கத்தைப் பொருட்படுத்தாமல் நாங்கள் எப்போதும் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version