Home மலேசியா வழிபாட்டுத் தலங்களை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் – டத்தோ முகமட் சுக்ரி

வழிபாட்டுத் தலங்களை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் – டத்தோ முகமட் சுக்ரி

கோத்தா பாரு, நவம்பர் :

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வழிபாட்டுத் தலங்களைத் தங்கள் பிரச்சாரத்திற்கான இடங்களாகப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கிளாந்தான் முப்தி டத்தோ முகமட் சுக்ரி முகமட் இன்று நினைவூட்டினார்.

மசூதிகள், சூராக்கள் மற்றும் முசோல்லாக்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் அரசியல் செல்வாக்கு இல்லாத ‘அமைதியான பகுதியாக’ மாற்றப்பட வேண்டும் என்றார்.

“முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தவறான புரிதலையும் பிளவையும் ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்காதீர்கள் என்றும் வழிபாட்டுத் தலங்கள் ஒற்றுமையையும் அன்பையும் வளர்க்கும் இடங்களாகவே பேணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version