Home Hot News இந்தோனேசியாவின் போலீஸ் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

இந்தோனேசியாவின் போலீஸ் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

ஜகார்த்தா, டிசம்பர் 7:

இந்தோனேசியாவின் ஜாவா தீவிலுள்ள பண்டாங்க் நகரில், அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்று காலை போலீசாரின் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர் தானாகவே அதை வெடிக்கச் செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் இரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 6 போலீசார் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரும் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது யார்? ஏதேனும் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version