Home மலேசியா நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி – பிரதமர் அறிவித்தார்

நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி – பிரதமர் அறிவித்தார்

பத்தாங்காலி முகாம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிதியுதவியை அறிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு RM10,000 மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா RM1,000 வழங்கப்படும்.

இங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மீட்புப் பணியாளர்களைப் பார்வையிட்ட பின்னர் அன்வார் இதனை அறிவித்தார். “நாங்கள் உதவியை விரைவுபடுத்துவோம் என்று அவர் கூறினார்.

முகாம் நடத்துனரின் பார்வையாளர் பதிவு பதிவின் அடிப்படையில், நிலச்சரிவின் போது அந்த இடத்தில் 94 முகாமாளர்கள் இருந்தனர். அதில் 61 பேர் உயிர் பிழைத்தனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. மேலும் 12 பேரைக் காணவில்லை. பந்தாங்காலி- கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலைக்கு அருகில் உள்ள இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version