Home மலேசியா ரவாங்கில் 6 வயது சிறுவன் வாய்க்காலில் தவறி விழுந்து, இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

ரவாங்கில் 6 வயது சிறுவன் வாய்க்காலில் தவறி விழுந்து, இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

நேற்று ரவாங்கின் தாமான் பிங்கிரான் பெலாங்கியில், தனது சகோதரி மற்றும் நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் வாய்க்காலில் விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில துணை இயக்குனர், ஹபிஷாம் முகமட் நூர் கூறினார்.

நேற்று பிற்பகல் 6.19 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது துறைக்கு அறிக்கை கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து, ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 10 உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்கள் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளுக்காக மாலை 6.23 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தன என்றார்.

“பாதிக்கப்பட்ட சிறுவன், அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என்றும், அவர் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

“சம்பவத்திற்கு முன், பாதிக்கப்பட்டவர் மழை ஓய்ந்த பிறகு நண்பர் மற்றும் அவரது சகோதரியுடன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version