ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், 12 பேர் கொல்லப்பட்டனர் என்று அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகச்சலாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் 12 பேர் இறந்தனர் என்று அமைச்சகம் சமூக ஊடகத்தில் தெரிவித்தது. காஸ்பியன் கடலில் அமைந்துள்ள மகச்சலா, தாகெஸ்தானின் தலைநகரம் ஆகும்.இது தொடர்பான செய்தியில், கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியது.
ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனம் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதையும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது, 260 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.