கிள்ளான் பண்டார் பாருவில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு ஆடவர்கள் கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) காலை 6.23 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
விபத்தில் மூன்று வாகனங்கள் சிக்கின. இரண்டு ஆடவர்கள் தங்கள் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து இறந்தனர். மேலும் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உட்பட ஐந்து பேர் விபத்தில் காயமடைந்தனர் என்று அவர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். உயிரிழந்த இருவரின் உடல்களும் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்த பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.