Home மலேசியா அரச மலேசிய போலீஸ் படையில் 5 இந்தியர்களுக்கு பதவி உயர்வு

அரச மலேசிய போலீஸ் படையில் 5 இந்தியர்களுக்கு பதவி உயர்வு

கோலாலம்பூர்:

ரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றிவரும் ஐந்து இந்தியர்கள் சார்ஜன் மேஜர் பதவிக்கு உயர்வு பெற்றுள்ளனர்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் பின் அப்துல் மஜீத் அவர்கள் அவர்களுக்கு பதவியை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்நிலையில் வங்சா மாஜு மாவட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் ஜெகன்நாத் சிவபெருமாள் டாமான்சாரா மாவட்டத்திற்கும், டாங் வாங்கி காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் ஆனந்தராஜ் ஜெயபிரதாபன் பிரிக்பில்டஸ் மாவட்டத்திற்கும், டாங்வாங்கி மாவட்ட காவல் நிலையத்தை சேர்ந்த தாரணி சிவராஜ் புத்ரா ஜெயா மாவட்டத்திற்கும், செந்தூல் மாவட்டத்தில் இருந்து சார்ஜன் மேஜர் காசிவேலு முருகேசன் புக்கிட் அமானுக்கும், டாங்வாங்கி மாவட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் நோர்ஹான் பின் ஓமார் செந்தூல் மாவட்ட காவல் நிலையத்திற்கும் வேலை மாற்றமாக செல்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version