Home ஆன்மிகம் வாங்கிய கடன் விரைவில் அடைபட வேண்டுமா?

வாங்கிய கடன் விரைவில் அடைபட வேண்டுமா?

வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டும், கடன் தொல்லையில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும், இனி வாழ்நாளில் எப்போதும் கடனே வாங்காத நிலை ஏற்பட வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சில குறிப்பிட்ட நாட்களில் கடனை திருப்பி கொடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். சுப காரியங்கள் செய்வதற்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பதைப் போல் கடனை வாங்குவதற்கும், திருப்பி கொடுப்பதற்கும் கூட நல்ல நேரம் பார்க்க வேண்டும்.

கடனை வாங்கும் போது அவசரமாக வாங்குவதை போல், எப்படியாவது கடனை அடைத்தால் போதும் என பலரும் கடனை திருப்பிக் கொடுக்கும் போதும் அவசரமாக கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். இதனால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நிலையே ஏற்படும்.

இப்படி மீண்டும் கடன் வாங்கக் கூடாது என நினைப்பவர்கள் மாதந்தோறும் வரும் மைத்ரேய முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி, அந்த நேரத்தில் கடனை திருப்பி செலுத்தலாம். அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும் இணையும் நேரமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் இணையும் காலத்திற்கு மைத்ரேய முகூர்த்தம் என்று பெயர். மாதத்திற்கு இரண்டு முறை மைத்ரேய முகூர்த்தம் வரும். மைத்ரேய முகூர்த்தம் என்பது 2 மணி நேரம் கொண்ட காலமாகும். இந்த 2 மணி நேரத்தை கடனை வாங்குவதற்கும், திருப்பி செலுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான முதல் மைத்ரேய முகூர்த்தம் ஏப்ரல் 09ம் தேதியே நிறைவடைந்து விட்டது. இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம் ஏப்ரல் 26ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

அன்றைய தினம் இரவு 07.35 முதல் 09.46 வரையிலான நேரம் மைத்ரேய முகூர்த்தம் உள்ளது. இந்த நேரத்தில் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தலாம். மைத்ரேய முகூர்த்தம் என்பது கடனை வட்டியும், அசலும் சேர்த்து நிறைவேறும் அடைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய நேரமாகும். மாதந்தோறும் கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை இந்த நேரத்தில் கொடுப்பதால் கடனை அடைத்து விட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை ஏப்ரல் 26ம் தேதி வரும் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் உங்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால், அன்றைய தினம் வரும் மைத்ரேய முகூர்த்த நேரத்தில், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து, விரைவில் கடனை திரும்ப செலுத்தும் நிலை ஏற்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு, ஒரு மஞ்சள் துணியில் ரூ.11 காணிக்கையை முடிந்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள். இப்படி செய்வதால் உங்களால் முழுவதுமாக கடன் தொகையை செலுத்த முடியவில்லை என்றாலும், படிப்படியாக கடன் தொல்லையில் இருந்து விடுபடும் சூழல் ஏற்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version