கூச்சிங்:
கெடாவின் பாடாங் செராய், தாமான் டேசா அமானில் உள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரியும் பெண்மணி ஒருவர், முதியவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது சமூக நலத்துறையில் பதிவு செய்யப்படவில்லை என்று டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
தற்போது விசாரணை நடந்துவருவதாகவும், விசாரணை நடந்து முடிந்ததும் குறித்த முதியோர் இல்லத்தை மூட உத்தரவிடுவோம் என்றும், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் கூறினார்.