உலகில் தாய் பாசத்திற்கு ஈடு இணையில்லை என்பதனை நாம் அனைவரும் அறிவோம். தாய் நம்மை அரவணைத்து ஆதரவு வழங்கியதால் அன்னை என்றும் அழைக்கிறோம். வருடம் முழுவதும் ஏன் வாழ்நாள் அன்னையை ஆராதனை செய்வது நமது விருப்பமாக இருக்கிறது. நான் தினமும் அன்னையை நினைத்திருந்தாலும் சிறப்பான ஒரு நாளாக அதனை கொண்டாடும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
அந்த வகையில் 8ஆவது ஆண்டாக அன்னைக்கு ஓர் ஆராதனை என்ற சிறப்பு செய்தல் நிகழ்ச்சி வரும் 1.5.2024 புதன்கிழமை ஆடல் பாடல் கொண்டாடத்துடன் இலவசமாக டத்தின் ஜெயகோகிலவாணி ஏற்பாட்டில் மாலை 6 மணி தொடங்கி இரவு 11 மணி வரை டான்ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.
முற்றிலும் இலவசமான இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அன்னைக்கு ஓர் ஆராதனை நிகழ்ச்சியை சிறப்பிக்க நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் புதல்வி மகா அழகு நிலைய உரிமையாளர் மகா லட்சுமி சிறப்பு விருந்தினராக வரவிருக்கிறார் என டத்தின் ஜெயகோகிலவாணி தெரிவித்தார்.