Home Hot News கட்சி தாவல்களுக்கு எதிரான மசோதா ஏப்ரல் 11 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்

கட்சி தாவல்களுக்கு எதிரான மசோதா ஏப்ரல் 11 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர், மார்ச் 24 :

கட்சி தாவல்களுக்கு எதிரான மசோதா எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜபார் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான தேதியை நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் கலந்துரையாடியதாகவும், கட்சித் தாவல்களுக்கு எதிரான மசோதாவை விவாதிக்க, ஏப்ரல் 11 ஆம் தேதி மாநாட்டை நடத்த அவர் ஒப்புக்கொண்டார் என்று வான் ஜுனைடி கூறினார்.

லிம் குவான் எங் (Ph-Bagan), நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், நாடாளுமன்ற அமர்வு நோன்பு மாதத்தில் நடத்தப்படுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வான் ஜுனைடி கூறினார்.

“இந்த மசோதாவை நாங்கள் தாக்கல் செய்வோம் என்றும், இந்த மசோதாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை எம்.பி.க்கள் தாங்களாகவே முடிவெடுக்கட்டும் என்றும் மாண்புமிகு பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்றும் இதற்கான விவாதம் ஒரு நாளில் முடிவடையாவிட்டால், இரண்டு நாட்கள் இந்த சிறப்பு அமர்வாக கூட இது நடைபெறலாம் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version