Home மலேசியா தேசிய மிருகக் காட்சி சாலைக்கு கடந்த 4 மாதங்களில் 100,000 பார்வையாளர்கள் வருகை

தேசிய மிருகக் காட்சி சாலைக்கு கடந்த 4 மாதங்களில் 100,000 பார்வையாளர்கள் வருகை

கோலாலம்பூர், மே 25 :

நாட்டில் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று அதனைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு என பல கசப்பான தருணத்தைச் சந்தித்த பிறகு, தேசிய மிருகக் காட்சி சாலை இப்போது கணிசமான பார்வையாளர்களைப் பெற்ற பிறகு, தனது வழமைக்கு திரும்பியுள்ளது.

தேசிய மிருகக் காட்சி சாலையின் துணைத் தலைவர் ரோஸ்லி @ ரஹ்மட் அஹ்மட் லானா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 100,000 பார்வையாளர்களுடன் ஜூ நெகாரா மாதத்திற்கு சுமார் RM600,000 முதல் RM800,000 வரை வருமானம் ஈட்டியுள்ளது என்றார்.

இங்கு கோலாலம்பூர் மத்திய ரிங் ரோடு 2 (எம்ஆர்ஆர்2) அருகே அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையின் நுழைவாயிலில் அதிக பார்வையாளர்கள் வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உதவ வேண்டிய நிலை ஏற்பட்டது.” என்றார்.

மலேசிய விலங்கியல் பூங்காக்கள் மற்றும் நீர்நிலைப் பூங்காக்களின் (MAZPA) 25வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு, “இந்த நேர்மறையான வளர்ச்சியால் நாங்கள் உண்மையிலேயே நிம்மதியடைந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

ரோஸ்லி கூறுகையில், ஜிங் ஜிங் மற்றும் லியாங் லியாங் என்ற பண்டா தம்பதியின் மூன்றாவது குட்டிக்கு ஷெங் யி என்று பெயர் வைக்கப்பட்டது, இது பார்வையாளர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version