Home மலேசியா பாடாங் தெராப் ஆற்றின் நீர்மட்டம் அபாய நிலையை தாண்டியுள்ளது; ஆற்றின் அருகேயுள்ள குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்க...

பாடாங் தெராப் ஆற்றின் நீர்மட்டம் அபாய நிலையை தாண்டியுள்ளது; ஆற்றின் அருகேயுள்ள குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

பாடாங் தெராப், நவம்பர் 25 :

நேற்று இரவு 10 மணி நிலவரப்படி, கம்போங் குபுவில் உள்ள பாடாங் தெராப் ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதாக பாடாங் தெராப் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, லெப்டினன்ட் (பிஏ) ரோஷிடி காசிம் தெரிவித்தார்.

இதுவரை சுங்கை பேரிக்கின் நீர்மட்டமும் எச்சரிக்கை அளவைக் காட்டுகிறது. அத்தோடு, நேற்று பிற்பகல் 6 மணி முதல் 7 மணி வரை அதன் உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்காணிப்பு முடிவுகளில் சுங்கை பாடாங் தெராப் மற்றும் சுங்கை பாடாங் சானையின் நீர்மட்டம் இன்னும் கட்டுக்குள் இருப்பது கண்டறியப்பட்டது என்றார்.

“இருப்பினும், ஆற்றின் அருகே வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அல்லது மீட்புக் குழுவைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“இந்தப் பகுதியில் இதுவரை எந்த வெள்ளப்பெருக்கு சம்பவங்களும் பதிவாகவில்லை, ஆனால் பாடாங் தெராப் குடிமைத் தற்காப்புப் படையின் உறுப்பினர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version