கோல சிலாங்கூர்:
அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 அன்று நெகிரி செம்பிலானில் 14 வயது மாணவர் ஒருவர், தனது பள்ளியால் நடத்தப்பட்ட நெடுந்தூர ஓட்டப்போட்டியின் போது கீழே விழுந்து இறந்த சம்பவத்தினை அனைத்து தரப்பினரும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், அதேநேரத்தில் அவற்றின் SOP நடைமுறைகளை மீளவும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்கள் மதிப்பாய்வு செய்யும் என்றும் அவர் சொன்னார்.