பெர்சத்துவுக்கு தாவிய 3 பேர் மீது அம்னோ வழக்கு

பெட்டாலிங் ஜெயா

அம்னோவின் வேட்பாளராக வெற்றி பெற்ற பின்னர், பிரிபுமி பெர்சத்து கட்சிக்குத் தாவிய மூன்று அம்னோவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு சம்பந்தமான கடிதங்கள் மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்திஃப் அகமட், சபாக் பெர்னம் உறுப்பினர் முகமட் ஃபாசியா முகமட் ஃபாக்கே மற்றும் உலு திரெங்கானு உறுப்பினர் ரோசோல் வாஹிட் ஆகியோருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

கடந்த மாதம் அதே போன்று கட்சி தாவிய முஸ்தாபா முகமட் (ஜெலி), ஹம்சா சைனுடின்(லாருட்), இக்மால் ஹிஷாம் அப்துல் அஸிஸ்(தானா மேரா) ஆகியோருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கட்சி தாவ அவர்களுக்கு உரிமை இருந்தாலும், கட்சியைப் பயன்படுத்தி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அதிலிருந்து வெளியேறுவது நம்பிக்கைத் துரோகம் என அனுவார் மூசா வர்ணித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here