கோத்தா பாரு
உடல்நலம் குன்றி இருக்கும் தமது தந்தையாரைப் பற்றி குழப்பமான செய்தி ஊடகங்களில் வருவதற்குத் தாமே காரணம் என கிளந்தான் சுல்தான், சுல்தான் முகமட் V தெரிவித்தார்.
தமது தந்தையாரைப் பற்றித் தவறான செய்திகள், அதனை அடுத்து அவரின் சொந்த புகைப்படங்களும் வாழ்க்கையைப் பற்றிய செய்திகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக சுல்தான் தெரிவித்தார்.
எனவே, அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென அவர் கேட்டுக் கொண்டது.
உண்மைக்கு மாறான செய்திகளும் புகைப்படங்களும் கிளந்தான் அரச குடும்பத்தினருக்கு மாறாத களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.