கோத்தா கினபாலு, மார்ச் 10-
சபா மாநிலத்தின் கோத்தா மருடு நகரை ஒட்டிய கடல் பகுதியில் 3.3 ரிக்டர் அளவு நில நடுக்கம் தாக்கியது. நேற்று பின்னிரவு 12.45 மணிக்கு நேர்ந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என மலேசிய புவியியல் ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது. நிலநலக்கத்தின் பின்விளைவுகள் என்ன என்பது குறித்து தாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் கழகம் அறிவித்துள்ளது.