கோலாலம்பூர், மார்ச் 22-
ஓரியண்டல் மெலகா ஸ்ட்ரெய்ட்ஸ் என்ற மருத்துவமனையில் நிமோனியா காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சக ஊழியருடன் நேரடிதொடர்பு வைத்திருந்ததை சிகிச்சைக்குப் பின்னரே ஒப்புக்கொண்டார் என்பதை மருத்துவமனை அறிக்கை கூறியது.
பெட்டாலிங் மசுதியில் அந்நபருடன் இருந்த இவர் மெலகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் கொரோனா 19 பாதிப்பு இருப்பது உறுதியானது.
கோலாலம்பூரில் அலுவலகத்தில் பணியாற்றும் 42 வயதுடைய இவருடன் தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தனிமைபடுத்தப்ப்டுள்ளனர் என்று ஒய் எம் எஸ் சி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.