சிகை அலங்கார நிலையங்கள் செயல்படத் தடை

கோலாலம்பூர் :நாடு முழுவதுமுள்ள சிகை அலங்கார நிலையங்கள் ஊரடங்கு காலத்தில் செயல்பட அரசாங்கம் தடை விதித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட அனுமதி வாபஸ் பெறப்படுகிறது.

மக்களின் சுகாதார நலன் கருதி அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

சிகை அலங்கார நிலையங்கள் மட்டுமல்ல, அழகு நிலையங்கள், மூக்குக் கண்ணாடி விற்பனைக் கடைகள் போன்றவையும் மறு அறிவிப்பு வரும் வரையில் செயல்பட அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here