இந்தியா என்றால் INdipendance Day In August என்பதால் இந்தியா என்ற என்ற பெயரைத்தாங்கி வந்ததாக படித்த செய்தி. இதிலும் பொருள் இருக்கிறது. இந்திய சுதந்திரம் ஆகஸ்ட் மாதத்தில்தான் கிடைத்தது. மலேசியவுக்கும் கூட இந்தியா என்றும் பயர் வைத்திருக்கலாம் அல்லவா? ஓர் உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாதே! மக்கள் சுதந்திரம் பெற்று மகிழ்ச்சியின் எல்லையைத்தொட்ட நாள் தான் இந்தியா என்றும் ஏற்கலாமே!
இது உண்மை என்றால், இந்தியாவுக்கு மற்றொரு பெயர் இருக்க வேண்டும் அல்லவா. அந்த பெயர் என்னவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை சிந்தனையாளர்கள் கூறியிருக்கின்றனர்.
அந்த பெயர் பாரத். இது சிறந்த உச்சரிப்பாக இருக்கிறது. பரத் என்ற சொல் பழமையானது அல்ல. பாரதம் அதில் இருக்கிறது. பரத நாட்டியம் என்பதை நினைவுக்குக் கொண்டுவரும். பரத் என்று சொல்லும்போதே பா ரதம் என்ற பசுமை உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும்.
பா –பாட்டு, ரதம் –அழகு, அழகிய பாட்டு, அல்லது கவிதையாக அமைந்திருக்கறது பரத் என்ற சொல். இந்தச்சொல்லில் இந்தியாவின் பெயர் மாற்றம் பெற்றால் எவர் வீட்டுசொத்தும் ஏலத்துக்குக்கு வந்துவிடாது.
இந்தியாவின் பெயர் மாற்றத்திற்கு மலேசியர்கள் வக்காலத்து ஏன்? இப்படியொரு கேள்வியும் எழலாம். ஏன் வக்காலத்து என்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது.
மலேசியர்களாகிவிட்ட இந்தியர்களின் மூதாதையர்கள் வாழந்த பூமி. பேர்க்குழந்தைகள் என்றால் பாட்டி மீதும் தாத்தா மீதும் அதிக அன்பு இருக்கும் என்பது கதையல்ல, கற்பனையும் அல்ல ஒரு நிசத்தின் உண்மை.
அதனால் அன்போடு இணைகின்ற வக்ககாலத்து இது. யாரும் கேள்வி கேட்கமுடியாது. கேட்டால் அதன் அதன் அர்த்தம். ஜாவா வரை பாயும்.
பாரத் என்பது காலத்தின் கட்டாயம் என்றாலும் தகும். இன்றைய உலகியல் சரித்திரத்தில் பயர் மாற்றங்கள் அவசியமானது. புதுமையிலும் பழமை மாறாமல் பல நாடுகள் பெயர் மாற்றம் செய்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது.
சிங்கப்பூரின் முன்னாள் பெயர் துமாசிக். இது பள்ளிப் பாடத்தில் இருக்கிறது. சிங்கப்பூர் என்ற பெயர் ஒரு காரணப்பெயர். மலாயா என்பதும் காரணப் பெயராகத்தான் இருந்தது, மலேசியா என்பதற்கும் பொருள் பொதுமையாய் இருக்கின்றன. பாரத் என்பதற்கும் ஓர் அழுத்தம் இருக்கிறது. இந்தியா என்ற சுகம் இருக்கவேண்டுமானால் பாரத் இந்தியா என்றும் யோசிக்கலாமே!