மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பல் பிடிப்பட்டது

ஷா ஆலம் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை திருடும் குற்றங்களில் ஈடுபட்ட வந்த இரு கும்பலை போலீஸார் கைது செய்தனர் என்று மாவட்ட காவல் துறை தலைவர் பஹாருடின் பின் மாட் தய்ப் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்ட ஓப்ஸ் லெஜாங் நடவடிக்கை மூலம் ஷா ஆலம் செக்‌ஷன் 16, கிள்ளான், பாண்டார் பாரு செலாயாங் ஆகிய இடங்களில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிடிப்பட்டவர்கள் மீது அதிகமான திருட்டு குற்றங்கள் பதிவாகியுள்ளன. சிலர் மீது போதைப் பொருள் குற்றங்களும் பதிவாகியுள்ளன.

அவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். பிடிப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here