இன்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது

இதற்கிடையே, இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினைப் பதிவுசெய்து வருகின்றனர். வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை  நடைபெற உள்ளது. தேவைப்பட்டால், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here