இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நிலநடுக்கம் உணரப்பட்டு வந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மராட்டிய மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 3 முறை லேசான நில நிலடுக்கம் பதிவான நிலையில், இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.