இயல்புநிலைக்கு திரும்பிய ஞாயிறு

சென்னையில் கடந்த 11 வாரங்களுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் இயல்பு நிலை திரும்பியது.

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல் அந்த நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று 11 வாரங்களுக்கு பின்னர் ஞாயிற்றுக் கிழமையில் சாலைகளில் வழக்கம்போல் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது. அரசு பேருந்துகள் இயங்கின. பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகள், வணிக வளாகங்களுக்குச் சென்றனர். இதனால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமையில் நீண்ட நாளைக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு கைவிடப்பட்டதால் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடந்த மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது அதற்கு முந்தைய நாளான சனிக் கிழமையில் வாங்கி வைத்துக்கொள்வதற்காக இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here