இந்தியரை தாக்கிய ஏழு பேர் கைது

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள அல் ரீபா என்ற பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மதுபானம் விற்று வந்தனர். இதுபற்றி புகார் அளிக்க கடந்த ஜூலையில் இவர்களின் வாகன எண்களை இந்தியர் ஒருவர் படம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். இந்த செயலில் ஈடுபட்ட நான்கு பாகிஸ்தானியர்கள் இரு நேபாளி மற்றும் ஒரு இந்தியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here