இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிவசுப்பிரமணியன் என்பவர் கட்டிய தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து ஆதித்திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததையடுத்து, சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அந்தச் சுவரை கட்டினார்.
இந்த நிலையில், அரசு அனுமதியுடன் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த தீண்டாமை சுவர் கட்டப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.