பசுக்களின் நிலைமை குறித்து கடிதம் – பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் கவுசலாக்களில் இறந்த பசுக்களின் படங்களைப் பார்த்ததும் மனமுடைந்து விட்டேன் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பிரியங்கா காந்தி தமது டிவிட்டரில், உத்தர பிரதேசத்திலிருந்து இறந்த மாடுகளின் படங்களைப் பார்த்து மனமுடைந்த நான், இந்த கடிதத்தை மாண்புமிகு முதலமைச்சருக்கு உ.பி. அரசுக்கு எழுதுகிறேன்.

மாநிலத்தின் பல கவுசலாக்களின் நிலைமை இதுதான். இந்த சிக்கலை தீர்க்க பல முன்மாதிரிகள் உள்ளன. பசுவை பராமரிப்பதற்கான அறிவிப்புகளுடன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று பதிவு செய்து இருந்தார்.

மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தையும் பதிவேற்றம் செய்தார். அந்த கடிதத்தில் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:

லலித்பூரில் உள்ள சவுஜ்னாவில் இறந்த பசுக்களின் புகைப்படங்களைப் பார்த்ததும் எனது மனம் கலக்கம் அடைந்தது. அந்த பசுக்கள் எப்படி இறந்தன என்ற விவரம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆனால் தீவனம் , தண்ணீர் இல்லாததால் அந்த பசுக்கள் இறந்து இருக்க வேண்டும் என்று அந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆட்சிக்கு வந்த நேரத்தில் முதல்வர் பசு வம்சத்தைப் பாதுகாப்பது கவுசலாக்கள் கட்டுவது குறித்து பேசினார். ஆனால், உண்மை என்னவென்றால் அரசாங்கத்தின் முயற்சிகள் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டன.

கவுசலாக்கள் திறக்கப்பட்டன. ஆனால், உண்மை என்னவென்றால் தீவனம் , நீர் மட்டுமல்லாமல் பசு சந்ததியினருக்கு எந்தவிதமான உணர்திறனும் இல்லை. பல அதிகாரிகள் கவுசலா ஆபரேட்டர்கள் ஊழலில் முழுமையாக ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும் பல பசுக்கள் பசியாலும் நீர் இல்லாமலும்  இறந்து கொண்டு இருக்கின்றன.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சத்தீஸ்கரில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அமல்படுத்திய கோதன் நியாய யோஜனாவை (கால்நடை நீதி திட்டம்) யோகி ஆதித்யநாத் பின்பற்ற வேண்டும். இவ்வாறு  பிரியங்கா காந்தி  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here