வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்குத் தடை – ஜப்பான்

ஐப்பான்-
 பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

புதிய வகை கொரோனா ஜப்பானில் பரவுவதைத் தவிா்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினா் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.  

இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய வகை கொரோனா அச்சம் காரணமாக பிரிட்டன் தென் கொரியாவிலிருந்து மட்டும் வெளிநாட்டினா் வருவதற்கு ஜப்பான் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here