அபுதாபியில் போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தசீருடையில் மொத்தம் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய சீருடையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்கள் , நிகழ்ச்சிகள் , கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் என தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நிர்வாகப் பிரிவில் பணியாற்றுவோர் கோட், சூட், டையுடன் கருநீல நிறத்தில் சீருடை உள்ளது. அதேபோல காவலர்களுக்குக் கருநீல நிறத்திலான பேண்ட் , வெளிர் நீல நிறத்திலான சட்டையுடன் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களில் பாதுகாப்பு பணிப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு முழுக்கை டி சர்ட், கருநீல நிறத்திலான பேண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடைகள் போலீஸ்துறையில் பணியாற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அபுதாபி முழுவதும் புதிய சீருடையில் போலீசாரை காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.