கோலாலம்பூர்: புத்தாண்டு கொண்டாட்ட நடவடிக்கையில் நாடு முழுவதும் 2,000 சம்மன் அனுப்பியுள்ளதாக புகிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (ஜேஎஸ்பிடி) உதவி இயக்குநர் ஹுசைலி யாகோப் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து சீராக இருந்தாலும் ஓட்டுநர்கள் தொடர்ந்து சாலையில் கவனமாக இருக்க வேண்டும் என்றார். அனைத்து சாலை பயனர்களும் தங்கள் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.
இது ஒரு நீண்ட விடுமுறை என்பதால் முன்னரே திட்டமிடுங்கள். மேலும் ஓட்டுநர்கள் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) அதிகாலை ஜாலான் டூத்தா டோல் பிளாசாவில் நடந்த நடவடிக்கையின் போது கூறினார்.
வியாழக்கிழமை (டிசம்பர் 31) காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை தொடரும். நள்ளிரவு நிலவரப்படி, போலீசார் நாடு முழுவதும் 2,318 சம்மன் அனுப்பியுள்ளனர்.
சுங்கை வே டோல் பிளாசாவில் ஒரு சட்டவிரோத குடியேறியவரையும் நாங்கள் கைது செய்தோம் என்று அவர் கூறினார்.