குழந்தைகள் உதவி மையம், மாவட்ட சமூக நலத்துறை மூலமாக குழந்தைத் திருமணம் தடுப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமின்றி ஏராளமான குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்லன. 238 குழந்தைத் திருமணங்கள் என்பது அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதுதான். ஆனால், கணக்கில் வராமல் எத்தனை குழந்தைத் திருமணங்கள் நடந்ததோ என்று தெரியவில்லை.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு குறைவால் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறதா என்றும் தெரியவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஆண்டிலாவது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை குறைக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.