இந்த கோவிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த கும்பல் நேற்று முன்தினம் கோவிலை இடித்து தீ வைத்து கொளுத்தியது. இதில் கோவில் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த சம்பவத்துக்கு பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மை அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்து கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக, இந்தியாவும், பாக்கிஸ்தானிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.