ஒற்றுமை அரசாங்கம் உதவும்!

பெட்டாலிங் ஜெயா:

மலேசியாவைச்  சூழ்ந்துள்ள சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அனைத்து அரசியல்  கட்சிகளும் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என அரசியல் ஆய்வாளரரான டாக்டர் லிம் டெக் நெய் கூறியுள்ளார்.

மலேசியாவில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது சிறந்த வழியாக இருக்கும். அத்தகைய அரசாங்கம் இப்போதைக்கு சிறந்த தீர்வை வழங்கும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் வேறுபாடுகளையும் உறுதியற்ற தன்மையையும் தணிப்பதற்கான சிறந்த வழி ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதாகும்.

இந்த முயற்சி தேசிய நலனைப் பாதுகாக்க ஒன்றிணைக்கும் தற்போதைய அரசாங்கத்தின் திறனுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது என்று யாங் டி-பெர்துவான்வான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடீன் அல் முஸ்தபா பில்லா ஷா கூறினார். 

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தை பெரும்பாலான மலேசியர்கள் ஆதரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் இன்று அல்லது ஆகஸ்டில் கூட ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொற்றுநோய் நெருக்கடி முடியும் வரை பெரும்பாலான மலேசியர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதை ஆதரிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here