அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா

பீஜிங்:
‘அருணாச்சல பிரதேசம், இந்திய எல்லைக்குட்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது’ என, அண்டை நாடான சீனா, மீண்டும் அடாவடியாகத்  தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், அத்துமீறி, சீன ராணுவம் நுழைந்ததையடுத்து, இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாகக் குவிக்கப்பட்டுள்ளன.
பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், இந்திய  நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில், ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது.
அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.அருணாச்சல பிரதேசத்தை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத்தின் ஒரு பகுதி என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் அங்கு கட்டுமானம் மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் , தெற்கு திபெத் பிராந்தியம் குறித்த சீனாவின் நிலைப்பாடு, எப்போதும் தெளிவாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை.  அது திபெத்தின் ஒரு பகுதி தான். ஆனாலும்  சொந்த எல்லைக்குட்பட்ட பகுதியில், கட்டுமான பணிகள் மேற்கொள்வது இயல்பான ஒன்றுதான். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here