மாஸ்கோ:
அவர்கள் இன்று காலை இது பற்றிய விண்ணப்பம் அளித்துள்ளனர். அதை முன்மதிப்பீடு செய்து வருகிறோம் என்று அந்த நாட்டு மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை இயக்குநர் கூறி உள்ளார்.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கடந்த வாரம் இங்கிலாந்து-சுவீடன் கூட்டு தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை 17 மில்லியன் டோஸ் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த நவம்பரில் ஏற்கனவே முதல் தவணையாக 2.6 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல அமெரிக்காவின் பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளுக்கும், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் பிலிப்பைன்ஸ் அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 14.8 கோடி டோஸ் தடுப்பூசிகளை பெற்று நாட்டு மக்களுக்கு பயன்படுத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.