பெட்டாலிங் ஜெயா: சுங்கை பூலோ மருத்துவமனையில் அம்பாங் அம்னோ பிரிவு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ இஸ்மாயில் கிஜோவின் உயிரை கோவிட்-19 புதன்கிழமை (பிப்ரவரி 3) மாய்த்து விட்டது.
69 வயதான இஸ்மாயில் மதியம் 12.33 மணிக்கு காலமானார் என்பதை சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது இறுதி சடங்கை அவர்கள் நடத்துவார்கள் என்றும் அமைச்சகம் கூறியது.
சிலாங்கூர் அம்னோ தலைவர் டான் ஸ்ரீ நோ ஒமர் தனது முகநூல் பதிவில் இஸ்மாயிலின் மரணத்தை உறுதிப்படுத்தினார். 2008 தேர்தலுக்கு முன்னர் 1995,1999 மற்றும் 2004 பொதுத் தேர்தல்களில் சிலாங்கூர் மாநில பதவியை வென்ற பின்னர் லெம்பா ஜெயாவில் இஸ்மாயில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.









