இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் வரலாறு கி.மு. 6- ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் 700 பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகிறது.
2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். கி.மு. 3- ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையில் முதன்முதலாக வர்த்தகத் தளத்தை அமைத்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்தான். அரசியல் உட்பூசல்களை பயன்படுத்தி இலங்கையில் தனது பலத்தை அவர்கள் விஸ்தரித்துக் கொண்டனர்.
ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் இலங்கை விடுதலை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமூக நிலையில் இருந்துவந்த தமிழ், சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள் சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின.
1958- இல் ஆரம்பித்து இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் ஆயுதேமந்திய உள்நாட்டு போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள்