பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி வங்காள தேசத்தில் நாடுமுழுவதும் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் மாதத்தில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது.
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இதுவரை 3,28,000 பேர் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற வங்காளதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 50 லட்சம் தடுப்பூசிகள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசு சார்பில் வங்காளதேசத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அதன்பின் பேசிய அவர், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது , நம்பகத்தன்மை வாய்ந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.