சபரிமலை மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் – கேரள அரசு அனுமதி!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்துமே ஒரு வருட காலங்களாக முடக்கப்பட்ட நிலையில் தானிருக்கிறது.

தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம், இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் ஊரடங்குகளைk குறைத்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.

அதில் ஒன்றாக போக்குவரத்து, தொழிற்சாலைகள் எல்லாம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நலையில் சபரிமலையில் மாதம்தோறும் நடைபெறக்கூடிய மாதாந்திர பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் அனுமதி உரிய முறையில் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்பொழுது அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here