ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம்
இதற்காக துபாய் முதலீட்டு பூங்கா பகுதியில் 1,080 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு நாடுகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வளாகத்தில் ரூ.450 கோடி (25 கோடி திர்ஹாம்) செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக 5 டி.எஸ். என்ற கருப்பொருளில் திறன் (டேலன்ட்), வர்த்தகம் (டிரேட்), பாரம்பரியம் (டிரடிசன்), சுற்றுலா (டூரிசம்) தொழில்நுட்பம் (டெக்னாலஜி) என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இடம்பெற உள்ளன. இதில் அந்த கட்டடத்தில் மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. தற்போது கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் அளித்துள்ளது.
எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய அரங்கம் முக்கிய இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.