மருத்துவமனையில் அனுமதி
இங்கிலாந்தின் 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனியார் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.
எடின்பர்க் டியூக் என்றும் அழைக்கப்படும் பிலிப், 2017 இல் தனது பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார், பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார்.
இங்கிலாந்தின் தற்போதைய கொரோனா வைரஸ் ஊரடங்கில் போது, அவர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணியுடன் தங்கியுள்ளார்