–குடும்பதைக் காப்பாற்ற அசுர முயற்சி!
அரிசிகெரே அருகே குடும்பத்தினரை காப்பாற்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் oruvar சிறுத்தையுடன் கட்டிபுரண்டு சண்டையிட்டார். இதில் சிறுத்தை செத்தது. இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.
அந்த சமயத்தில் ஒரு சிறுத்தை மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்துள்ளது. இதனால் ராஜகோபால் நாயக்காவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சிறுத்தை மீது மோதி கவிழ்ந்தது. இதனால் ராஜகோபால் நாயக்கா உள்பட 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதனால் ஆக்ரோஷம் அடைந்த சிறுத்தை, 3 பேரையும் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் நாயக்கா, சிறுத்தையிடம் இருந்து குடும்பத்தினரை காப்பாற்ற சிறுத்தையுடன் கட்டி புரண்டு சண்டையிட்டார். பின்னர் சிறுத்தையை தலையில் பலமாகத் தாக்கி தூக்கி வீசினார்.
இதில் சிறுத்தை துடி, துடித்து செத்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். மேலும் சிறுத்தையுடன் சண்டையிட்டதில் ராஜகோபால் நாயக்கா பலத்த காயமடைந்தார். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பண்டகெரே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
மேலும் சம்பவம் பற்றி அறிந்து அரிசிகெரே வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி, மகளை சிறுத்தை தாக்கியதால், குடும்பத்தினரை காப்பாற்ற சிறுத்தையை ராஜகோபால் நாயக்கா தாக்கியதும், அதில் சிறுத்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.
இது குறித்து பெண்டகெரே கிராம மக்கள் கூறுகையில், பெண்டகெரேயில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் பைரகொண்டனஹள்ளி கிராமம் உள்ளது.