-வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வெளியே சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்களிடம், சிறுமி நடந்த விவரங்களைக் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கியாஸ் பழுது பார்க்கும் வேலை செய்து வருவதும், ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட அவர், 3- ஆவதாக வீடு புகுந்து சிறுமிக்கு கட்டாயத் தாலி கட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை கைது செய்த போலீசார், மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.