5 லட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் மீள முடியாமல் மரணம் அடைந்துள்ளனர்.
அங்கு தற்போது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தீவிரமாக போடப்பட்டு வருகிறது.
அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “எங்கள் நிர்வாகத்தின் முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட எண்ணியுள்ளோம். அதில் பாதியளவை இப்போது அடைந்து இருக்கிறோம். ஆனாலும் இது ஓய்வு எடுக்க வேண்டிய தருணம் இல்லை.
அமெரிக்காவில் 65 வயது கடந்தவர்களில் 50 சதவீதத்தினரும், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களில் 75 சதவீதத்தினரும் தடுப்பூசி ஒரு டோஸ் பெற்றுக்கொண்டு விட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.